உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாகனம் மோதி இருவர் பலி

வாகனம் மோதி இருவர் பலி

திருநெல்வேலி : கூடங்குளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பீஹாரை சேர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பீஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கூடங்குளம் -- உவரி கிழக்கு கடற்கரை சாலை முருகானந்தபுரம் அருகே நேற்று அதிகாலை 2 பேர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தனர். கூடங்குளம் போலீசார் விசாரணையில் விபத்தில் இறந்தவர்கள் பீஹாரை சேர்ந்த பிரயாக்ரிஷி 40, சோக்தாரிஷி 51, என தெரியவந்தது. இவர்கள் அதே பகுதியில் வேலைக்கு சென்ற போது வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை