உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

குன்றத்துார், குன்றத்துார் அருகே மணிமங்கலம், 'மருதம் ப்ரீஸ்' அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாலகுமரன், 40. இவர், ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி வித்யா, 35. இவர்களுக்கு, ஆருத்ரா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் காய வைத்த துணியை எடுக்க, குழந்தை ஆருத்ராவுடன் வித்யா நேற்று முன்தினம் மாலை சென்றார்.அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, மாடி படிக்கட்டு கைப்பிடி கம்பி வழியே எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தது.அப்பகுதியில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார்மருத்துவமனையில்அனுமதித்தனர்.அங்கு சிகிச்சைபலனின்றி குழந்தைஉயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார்விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !