உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை, வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2024---25 கல்வியாண்டிற்க்கான பயிற்சியாளர் நேரடி சேர்க்கை, வரும் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன், அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.இது தொடர்பான விவரம் தெரிந்து கொள்ள உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில், நேரிலோ, gmail.comஎன்ற இ-மெயில் மற்றும் 94442 24363, 94869 39263, 94441 39373 என்ற ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி