உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆபத்தான நத்தம் கிராம சாலை அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம்

ஆபத்தான நத்தம் கிராம சாலை அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, தம்புரெட்டிபாளையம் கிராமம் முதல், நத்தம் கிராமம் வரையிலான, 3.2 கி.மீ., சாலை, ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் இருந்த சாலையாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன், மாநில நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு கிராமபுற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அந்த சாலை இணைக்கப்பட்டது.படுமோசமான நிலையில் இருந்த அந்த சாலையை புதுப்பிக்க, கடந்த ஆண்டு, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சாலை பணிகளை துரிதமாக மேற்கொண்டு முடித்தனர்.சாலையில் தண்ணீர் தேங்கினால் விரைவில் பழுதாக கூடும் என்பதால், சாலையை, நான்கு முதல், ஐந்து அடி உயரத்திற்கு அமைத்தனர். ஆனால் எதிர் எதிரே இரு கார்கள் கடக்க நேரிட்டால் சாலையை விட்டு இறங்கி கடக்க முடியாத அளவிற்கு உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.அந்த சமயத்தில் ஏதாவது ஒரு கார் பின் நோக்கி சென்று இடம் கிடைக்கும் இடத்தில் ஒதுங்கினால் மட்டுமே மற்றொரு கார் கடக்க முடியும்.அப்படி கடக்கும் போது, சற்று கவனம் தவறினாலும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இரவு நேரத்தில் அனைத்து வாகனங்களும் அச்சத்துடன் அந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.சாலை அமைத்த நெடுஞ்சாலைத் துறையினர், குறுகலான அந்த சாலையின் இரு புறமும், கிராவல் மண் குவித்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ