உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ரூ.363 கோடி வழங்கல்

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ரூ.363 கோடி வழங்கல்

திருவள்ளூர்:பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், இதுவரை 1.63 லட்சம் விவசாயிகளுக்கு, 363 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-- - 17 முதல் 2022-- 23 வரை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால், வேளாண் துறையின் வாயிலாக 363.08 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு தொகை 1 லட்சத்து 63 ஆயிரத்து 346 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் விவசாயிகளின் தவறான வங்கி கணக்குகள் பதிவேற்றம் செய்ததால், வழங்கப்படாமல் விடுபட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையின் வாயிலாக, 7,530 விவசாயிகளுக்கு 14.29 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது.2023- -24ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு 21,635 விவசாயிகள் 58,487 ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். நவரை பருவ நெல் மற்றும் ராபி இதர பயிர்களுக்கு 402 விவசாயிகள், 1,368 ஏக்கர் நெற் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ