உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்து அச்சத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

விபத்து அச்சத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது கூரை, சுவர்கள் சேதமடைந்து அவ்வப்போது சிமென்ட் பூச்சு உதிர்ந்து வருகிறது.இதனால் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சான்றிதழ், நிலம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட சேவைகளை பெற வரும் மக்கள் அலுவலகத்திற்கு வர அச்சப்படுகின்றனர்.மக்களுக்கான சேவையை வழங்கும் கட்டடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் சேதமடைந்துள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் விபத்துக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக புலம்புகின்றனர்.எனவே பழுதடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !