மேலும் செய்திகள்
நகை திருட்டு; போலீஸ் விசாரணை
01-Aug-2025
திருவள்ளூர்:பூட்டிய வீட்டில், 3 சவரன் நகை மற்றும் பணம் திருடு போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர், சிவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டாபி மனைவி தனலட்சுமி, 49. காக்களூர் அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 31ம் தேதி காலை வேலைக்குச் சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் இருந்த பீரோவில் வைத்திருந்த, 3 சவரன் நகை, 4,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
01-Aug-2025