உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு

கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள், நிலம் சம்பந்தமாக -45, சமூக பாதுகாப்பு திட்டம்- 60, வேலைவாய்ப்பு கோரி- 52, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி- 65 மற்றும் இதர துறை 193 என, மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை