உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

பழவேற்காடு:சென்னை, செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 40. இவரது மகன் திலக் பிரசன்னா, 16. இவர், சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று, சுரேஷ்குமார் குடும்பத்தினருடன், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வந்தார். லைட்அவுஸ்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில், திலக் பிரசன்னா விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென எழும்பிய ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.தகவல் அறிந்த மீனவர்கள் அங்கு விரைந்து செல்வதற்குள், திலக் பிரசன்னா கடல் நீரில் மூழ்கி மாயமானார். திருப்பாலைவனம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் மாயமான திலக் பிரசன்னாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை