பெங்களூரு விரைவு ரயில் திருவள்ளூரில் நிறுத்தம்
திருவள்ளூர்,:சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகில் கன மழையால், தண்டவாளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதையடுத்து, பெங்களூரு - சென்னை விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது. பெரும்பாலான பயணியர் புறநகர் ரயில்களில் சென்னை சென்றனர்.மேலும், சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில்கள் திருவள்ளூரில் இருந்து இயக்கப்பட்டன.