உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முருகன் கோவிலில் முதியவர் சடலம் மீட்பு

முருகன் கோவிலில் முதியவர் சடலம் மீட்பு

திருத்தணி:முருகன் மலைக்கோவில் பின்புறத்தில் உயிரிழந்த நிலையில் முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவில் பின்புறம் உள்ள பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முதியவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்த திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை