உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, சின்னசெங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; கூலி தொழிலாளி. இவருக்கு, பவானி, 45 என்ற மனைவி, பவித்ரா என்ற மகள், தமிழரசன் என்ற மகள் உள்ளனர்.கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று, வடமதுரை ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.ஏரியில் மிதந்த சடலம் சுப்பிரமணி என்பது தெரியவந்தது. சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ