மேலும் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
28-Aug-2025
ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, வயல்வெளியில் இறந்து கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர். வெங்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது புலியூர்கண்டிகை கிராமம். இங்கு வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அருண்குமார், 26. வெல்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு லக் ஷிதா, 4, ஜெஸ்மிதா, 3, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த, 23ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. நேற்று வீட்டில் இருந்து ஒரு கி.மீட்டர் துாரத்தில் உள்ள வயல்வெளியில் வாலிபர் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தேவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்தனர். அங்கு இறந்து கிடந்தது அருண்குமார் என்பது தெரிந்தது. மேலும், அவரது உடலில் காயங்கள் இருந்தன. சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்து போன அருண்குமார், போதை அதிகமாக இறந்தாரா, யாராவது கொலை செய்தனரா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
28-Aug-2025