உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற கார் வரி செலுத்தாததால் பொன்பாடியில் பறிமுதல்

சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற கார் வரி செலுத்தாததால் பொன்பாடியில் பறிமுதல்

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, தமிழக - ஆந்திர மாநில எல்லையான, திருத்தணி அடுத்த, பொன்பாடி பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.இந்த சோதனைச்சாவடியில் நேற்று, மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் வாகனங்களை தணிக்கை செய்தார். அப்போது, சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு படப்பிடிப்புக்காக சென்று கொண்டிருந்த, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனத்தை சந்தேகத்தின்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிறுத்தி சோதனை செய்தார்.இந்த கார் சமீபத்தில், நடிகர் ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்தில் பங்கேற்ற சொகுசு கார் என தெரிய வந்தது.அதை தொடர்ந்து வாகனத்தின் ஆவணங்களை சோதனை செய்ததில், 'ஜிப்ஸி' வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலரின் முறையான அனுமதியின்றி, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் போல வடிவமைப்பு செய்து, சினிமா சூட்டிங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்ததும் தெரிந்தது.மேலும், இந்த வாகனம், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்து, தமிழ்நாட்டிற்கு பெயர் மாற்றம் செய்ய, என்.ஓ.சி., பெற்று இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மறு வாகனப் பதிவு மேற்கொள்ளாமல், தமிழக வாகன வரி செலுத்தாமல் வாகனம் இயக்கப்பட்டது தெரிந்தது.இதையடுத்து அந்த வாகனத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ