வாய்க்காலில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 25. இவரது மகள் பூஜா, 3. நேற்று காலை, ரமேஷின் மாமனார் வடிவேலு, வீட்டில் இருந்து அருகில் உள்ள காட்டிற்கு மூலிகை பறிக்க சென்றுள்ளார்.அப்போது குழந்தை பூஜாவும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளது. இதை, வடிவேலு கவனிக்கவில்லை. இடையில் குறுக்கிட்ட வாய்க்காலை தாண்டி வடிவேல் சென்று விட்டார்.பூஜா, அந்த வாய்க்காலில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பூஜாவை தண்ணீரில் இருந்து மீட்டு உள்ளனர்.பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பூஜா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.