உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரண்டே மாதத்தில் மூடுவிழா கண்ட சின்னம்மாபேட்டை புறக்காவல் நிலையம்; அதிகரிக்கும் குற்றங்களால் கிராமவாசிகள் பீதி

இரண்டே மாதத்தில் மூடுவிழா கண்ட சின்னம்மாபேட்டை புறக்காவல் நிலையம்; அதிகரிக்கும் குற்றங்களால் கிராமவாசிகள் பீதி

திருவாலங்காடு; திருவாலங்காடு ஒன்றியம் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை கிராமம் உள்ளது. இங்கு, திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளதால், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.தினமும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, 30,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு, டாஸ்மாக் கடை உள்ளதால் குடிமகன்களின் தொல்லை அதிகரித்தது.மேலும், கஞ்சா வாலிபர்களின் தொடர் அட்டகாசம் உள்ளதால், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே சென்று வந்தனர். எனவே, இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.கடந்தாண்டு ஜூலை மாதம் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், இப்பகுதிவாசிகள் நிம்மதி அடைந்தனர். ஆனால், புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. தற்போது, ஓராண்டாக மூடியே உள்ளது.இதனால், சின்னம்மாபேட்டை, அரிசந்திராபுரம், வியாசபுரம் தொழுதாவூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு, கஞ்சா புழக்கம் மற்றும் போதை ஆசாமிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் பகுதிவாசிகள் அச்சமடைந்து உள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:புறக்காவல் நிலையம் திறந்ததும், சாலையில் மது அருந்துவது, கஞ்சா விற்பது மற்றும் வாலிபர்களின் அட்டகாசம் குறைந்தது. தற்போது, மீண்டும் தலைதுாக்கி உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.புறக்காவல் நிலையத்தில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தியும், காவலர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. உயரதிகாரிகள் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ