மின் கம்பத்தில் படர்ந்து வளரும் செடி, கொடிகள்
ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், தும்பாக்கம் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில், செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், அவசர காலத்தில் பழுது பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் கம்பத்தில் படர்ந்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமகிருஷ்ணன், பாலவாக்கம்.