உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின

திருவள்ளூர் சுகாதார அலுவலகத்தில் கணினி, ஏசி, ஆவணங்கள் தீயில் கருகின

திருவள்ளூர்:திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி பகுதியில், இரண்டானது மாடி கட்டடத்தில் மாவட்ட சுகாதார அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் முதல் மாடியில், பராமரிப்பு பணிகள் நடப்பதால் இரண்டாவது தளத்தில் கூடுதலாக கணினிகள் வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், திடீரென கணினிகள் இருக்கும் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தன.இதனால், அலுவலகம் முழுதும் புகைமூட்டம் ஏற்பட்டதால், திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.திருவள்ளூர் உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.அதற்குள் அலுவலகத்தில் இருந்த 8 கம்ப்யூட்டர்கள், 2 பிரிண்டர், 3 ஏசி மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. திருவள்ளூர் டவுன் போலீசார்விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ