வரும் 30ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வங்கிகள், மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்று வேளாண் சார்ந்த குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.