மேலும் செய்திகள்
போதை ஒழிப்பு குறித்து கல்லுாரியில் கருத்தரங்கம்
27-Oct-2025
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. திருவாலங்காடு அடுத்த புதுார் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில், போதை ஒழிப்பு, தற்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் அரசு பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போதை ஒழிப்பு மற்றும் தற்கொலை தவிர்த்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கில் பேசினர்.
27-Oct-2025