மேலும் செய்திகள்
ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு
22-Sep-2024
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வள்ளியம்மாபுரம் புதிய பைபாஸ் சாலை அருகே இரண்டு அரசு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் அருகே நேற்று காலை, 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் சட்டை பாக்கெட்டில் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதற்கான ஓபி சீட்டும், அதில் பாபு என்றும் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
22-Sep-2024