உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தார். அரக்கோணத்தைச் சேர்ந்தவர் குமார், 50. இவர், கடந்த 15ம் தேதி இரவு தன் தாய் ராணி, 74, என்பவருடன், 'யமஹா ரே' பைக்கில், திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கனகவல்லிபுரம் அருகே வந்த போது, நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், குமாருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த மூதாட்டி ராணி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை