பேருந்து நிலையத்தில் மூதாட்டி சடலம் மீட்பு
பெரியபாளையம்: அக். 26-: பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் மூதாட்டி சடலத்தை போலீசார் மீட்டனர். பெரியபாளையம் பேருந்து நிலையத்தில், அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.