உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியகுப்பத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஜானகிராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்து, மின் நுகர்வோரிடம் இருந்து மனு பெற உள்ளார். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட, மின் நுகர்வோர் தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ