உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரும் 17ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

வரும் 17ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர்:முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 17ம் தேதி நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 17ம் தேதி மாலை 3:00 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பங்கேற்று, மனுக்களை பெற உள்ளார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், இச்சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை