உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் மருந்தகம் அமைக்க 5 வரை அவகாசம் நீட்டிப்பு

முதல்வர் மருந்தகம் அமைக்க 5 வரை அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க வரும் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சண்முகவள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக முதல்வர், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் ஆயிரம் முதல்வர் மருந்தகம் திறக்க உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்யோர் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் கடந்த 30 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது பொதுமக்கள் நலன் கருதி வரும் 5 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை