உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச ஆங்கில தேர்வு பயிற்சி ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு

இலவச ஆங்கில தேர்வு பயிற்சி ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு

திருவள்ளூர்:தாட்கோ வாயிலாக மருத்துவம் சார்ந்த ஆங்கில தேர்வு இலவச பயிற்சிக்கு, இணையத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், தாட்கோ வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி., எம்.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பொது செவிலியர் மருத்துவ படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியில் பங்கு பெற 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இரண்டு மாதம் பயிற்சிக்கு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, நிறுவனத்தின் வாயிலாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை