உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கங்கையம்மன் ஜாத்திரை விழா கோலாகலம்

கங்கையம்மன் ஜாத்திரை விழா கோலாகலம்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் கோரமங்கலம் மற்றும் முருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில், கங்கையம்மன் ஜாத்திரை விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு சக்தி அம்மன் மற்றும் கிராம தேவதைகளுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு 7:00 மணிக்கு களிமண்ணால் செய்த கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது. அதேபோல், திருத்தணி அடுத்த கெடவாரிகண்டிகை கிராமத்திலும் கங்கையம்மன் ஜாத்திரை விழா வெகுவிமரிசையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ