உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை

526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில், அக்.,2ல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காலை 11:00 மணியளவில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விவாதங்களில் பங்கேற்று, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை