மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனங்கள் வரும் 12ல் பொது ஏலம்
09-Mar-2025
திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வழக்கு விசாரணை நிறைவடைந்ததும், மாவட்ட காவல் அலுவலகத்தில் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.நன்றாக உள்ள வாகனங்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், மிகவும் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்காக, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளன. இதனால், கோட்டாட்சியர் அலுவலகம், 'காயலான்' கடை போல் காட்சியளிப்பதாக, அங்கு வருவோர் புகார் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக, பாரம்பரிய கட்டடமான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அதன் பழமையை இழந்து பரிதாபத்தில் உள்ளது. எனவே, கோட்டாட்சியர் அலுவலகத்தில் குவித்து வைக்கப்பட்ட வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
09-Mar-2025