மேலும் செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.,ல் சேர அழைப்பு
25-May-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ.,க்களில் மாணவர்கள் சேர, இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு 2025- -26ம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு உதவிடும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்துார், கும்மிடிப்பூண்டி மற்றும் வடகரை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளூர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.கல்வி தகுதி 8, 10ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப கட்டணத் தொகைரூ 50 ரூபாய் இணையதளம் வாயிலாக செலுத்தாலம். விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் ஜூன் 13. கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் அதன் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின் இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
25-May-2025