உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சத்துணவு உதவியாளர் வீட்டில் நகை திருட்டு

சத்துணவு உதவியாளர் வீட்டில் நகை திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சத்துணவு உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 6.5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே நெல்லிமரத்துக்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் ஹேமலதா, 39. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்ற பின், மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6.5 சவரன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை