சிறுவாபுரியில் கொடி ஏற்றத்துடன் கந்தசஷ்டி உற்சவம் துவக்கம்
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன், நேற்று மஹா கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது.