உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொண்டஞ்சேரி கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

கொண்டஞ்சேரி கிளை நுாலகம் பயன்பாட்டிற்கு வராமல் வீண்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் கிளை நுாலகம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வ்நதது.போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த இந்த கிளை நுாலகம், 2022 - -23ம் ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 1.18 லட்சம் ரூபாய் மதிப்பில், கிளை நுாலகம் ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் சீரமைக்கபட்ட்டது.இந்த நுாலகம் சீரமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் நுாலகர் மற்றும் புத்தகங்கள் இல்லாமல் பூட்டியே வீணாகி வருகிறது.மேலும், தற்போது பெய்த மழையில் கிளை நுாலகத்தைச் சுற்றி மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நுாலகரை நியமித்து புத்தகங்களுடன் கிளை நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கொண்டஞ்சேரி நுாலக வாசகர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி