பழவேற்காடு சரணாலயத்தில் கூழைக்கிடா பறவைகள்
கும்மிடிப்பூண்டி:பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில், நுாற்றுக்கணக்காக கூழைக்கடா பறவைகள் கூட்டமாக இரை தேடும் அழகை, சுற்றுலா பயணியர் ரசித்து வருகின்றனர்.பழவேற்காடு ஏரி தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியை இணைத்தபடி, 481 சதுர, கி.மீ., பரப்பு கொண்ட பரந்து விரிந்த ஏரியாகும். அந்த ஏரியின் சதுப்பு நில பகுதிகள், பறவைகள் இரை தேட தோதுவாக இருப்பதால், சுமார், 100 வகையான பறவைகள், பழவேற்காடு ஏரியை வசிப்பிடமாக கொண்டுள்ளன.ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா நோக்கி செல்லும் சாலையின் இரு புறமும், பழவேற்காடு ஏரியின் சதுப்பு நில பகுதிகள் உள்ளன. அங்கு இரை தேடும் பறவைகளை காண எப்போதும் சுற்றுலா பயணியர் வருவது வழக்கம்.இங்கு சுற்றுலா பயணியரை உற்சாகப்படுத்தும் விதமாக, கண்ணுக்கு எட்டிய தொலைவில் உள்ள திட்டுகளில், நுாற்றுக்கணக்கான கூழைக்டா பறவைகள் கூட்டமாக இரை தேடி வருகின்றன.பைனாகுலர் உதவியுடன், சுற்றுலா பயணியர் ரசித்து வருகின்றனர்.