உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

 ஏரி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் ஏரி நிலத்தை நீர்வளத் துறையினர் மீட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தில், நீர்வளத்துறையினர் பராமரிப்பில் ஏரி உள்ளது. ஏரிக்கு உட்பட்ட, 2 ஏக்கர் நிலத்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தனர். இதுகுறித்து தொடர் புகார்கள் வந்ததால், நேற்று இரு பொக்லைன் இயந்திரங்களுடன், நீர்வளத்துறையினர் அங்கு சென்றனர். ஆக்கிரமிப்பில் இருந்த 2 ஏக்கர் பயிர் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை