மணல் கடத்திய லாரி பறிமுதல்
கனகம்மாசத்திரம்: ஜன. 8---: சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் காவல் நிலையம் சந்திப்பில், போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியை சென்னை ரெட்ஹில்சை சேர்ந்த பாபு, 31, என்பவர் ஓட்டி வந்தார். அதில், ஆந்திராவில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியதும், சென்னையில் அதிக விலைக்கு விற்க கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, பாபுவை கைது செய்த கனகம்மாசத்திரம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.