உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பு இல்லாத நிழற்குடை

பராமரிப்பு இல்லாத நிழற்குடை

நயப்பாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் புதுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்டது நயப்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர், பேருந்து வாயிலாக ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மேவளூர்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் பயில்கின்றனர்.இதில், மேவளூர்குப்பம் பள்ளி அருகே உள்ள நிழற்குடை பராமரிப்பில்லாமல் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், பள்ளிக்கு செல்லும் நயப்பாக்கம் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ