உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் சிக்கினார்

மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் சிக்கினார்

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட கீழப்பூடி பகுதியில், மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்றுமுன்தினம், கீழப்பூடி பகுதிக்கு, போலீசார் சென்றபோது கொசஸ்த்தலை ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிக் கொண்டு செல்வது தெரியவந்தது.மாட்டு வண்டியை மடக்கி நிறுத்திய போலீசார், கடத்தலில் ஈடுபட்டவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாட்டு வண்டியுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்டவர், கீழப்பூடி காலனியைச் சேர்ந்த சின்னராசு, 31, என, தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை