உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ஆவடி:பட்டாபிராம் அருகே தனியார் நிறுவன ஊழியர் மதுபோதையில், முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். பட்டாபிராம் அடுத்த கோபாலபுரம் ஆறாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராஜசேகர், 50; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி, 45. தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ராஜசேகர் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி, வீட்டின் முதல் மாடியில் உள்ள சுற்றுச்சுவர் மீது அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் ராஜசேகர் இறந்தது தெரிந்தன. பட்டாபிராம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை