பேருந்தில் இருந்து விழுந்தவர் படுகாயம்
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பஜார் தெருவைச் சேர்ந்தவர் முரளி, 62. இவர் நேற்று, பள்ளிப்பட்டுக்கு தனியார் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தார். பள்ளிப்பட்டு பஜார் தெரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, இறங்க முற்பட்டார். அவர் இறங்குவதற்குள் பேருந்து புறப்பட்டது.இதில், பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.