உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாததால் நேமம் பயணியர் அவதி

நிழற்குடை இல்லாததால் நேமம் பயணியர் அவதி

நேமம்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்துள்ளது, நேமம் கிராமம். இங்கிருந்து, சென்னை மற்றும் திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில், நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்து நிற்கும் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேமம் பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை