உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

திருத்தணி:திருத்தணி ஜோதிசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி புவனா,71. இவர் தன் மகன் குமார் வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலை திருத்தணியில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து வெளியே சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் புவனா வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை