உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒரக்காடிற்கு குடிநீர் வசதி கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

ஒரக்காடிற்கு குடிநீர் வசதி கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை

சோழவரம்:சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரக்காடு கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீர், அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை வலியறுத்தி, கிராமவாசிகள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின்போது, ஒரக்காடு கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள, 14.5 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும். ஒரக்காடு கிராமத்தில் அனைத்து மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்; தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள மழைநீர் வடிகாலை மீட்டு, குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுவதை தடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர்சோழவரம் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சு நடத்தினர்.கிராமவாசிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை தொடர்ந்து கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ