உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

கும்மிடியில் நாய்களின் தொல்லை கட்டுப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல நாய்களின் பெருக்கம் அதிகரித்து, சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக சுற்றி திரிகின்றன. சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென வருவதால், அவ்வழியாக, டூ- - வீலரின் கடந்து செல்வோர் விபத்தினை சந்திக்க நேரிடுகிறது.இறைச்சிக் கடைகள், சாலையோர உணவகங்கள் உள்ள பகுதியில், உணவுக்கு சண்டையிடும் நாய்களில் மத்தியில், பொதுமக்கள் கடந்து செல்ல அஞ்சுகின்றனர்.குறிப்பாக, அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களை விரட்டும் நாய்கள், நள்ளிரவில் டூ- - வீலரில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க பாயும் நாய்கள் என கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் இணைந்து அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை