உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தக்கோலம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

தக்கோலம் சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் நெடுஞ்சாலை 16 கி.மீ., தூரம் உள்ளது. இச்சாலை வழியாக திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில் கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரத்தில்சாலையின் குறுக்கேபள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், இரவில் அவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் சாலையின் குறுக்கேஉள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி