மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம் 362 மனுக்கள் ஏற்பு
19-Aug-2025
திருவள்ளூர்:திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 365 மனு ஏற்கப்பட்டது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 119, சமூக பாதுகாப்பு திட்டம் 25, வேலைவாய்ப்பு வேண்டி 52, அடிப்படை வசதி கோரி 68, இதர துறை 101 என, மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
19-Aug-2025