மேலும் செய்திகள்
தேஜஸ் உட்பட 15 ரயில்களின் சேவையில் மாற்றம்
03-Jan-2025
சென்னை, பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், வந்தே பாரத் உள்ளிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மத்திய பிரசேதசம், இந்துார் - கேரளா மாநிலம், கொச்சுவேலி; ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் - கேரளா மாநிலம், ஆலப்புழா விரைவு ரயில்கள் இன்று மாற்றுப்பாதையாக, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி வழியாக செல்வதால், சென்ட்ரலுக்கு செல்லாது. பெரம்பூரில் நின்று செல்லும்ஆலப்புழா - தன்பாத் மற்றும் கொச்சுவேலி - சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா விரைவு ரயில்கள், வரும் 30ம் தேதி மாற்றுப்பாதையாக பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக செல்கிறது. இந்த ரயில்கள் சென்ட்ரலுக்கு செல்லாதுசென்ட்ரல் - விஜயவாடா காலை 5:30 மணி வந்தே பாரத் ரயில், நாளை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் பாலக்காடு - சென்ட்ரல் மாலை 4:10 மணி ரயில், இன்று கடற்கரைக்கு இயக்கப்படும்ஈரோடு - சென்ட்ரல் இரவு 9:00 மணி விரைவு ரயில், இன்று பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் இரவு 10:40 மணி; ஆலப்புழா - சென்ட்ரல் மாலை 3:20 மணி ரயில்கள், இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்சென்ட்ரல் - மைசூர் சதாப்தி காலை 6:00 மணி ரயில், நாளை 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்சென்ட்ரல் - கோவை காலை 6:10 மணி ரயில், நாளை 40 நிமிடங்கள்; சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி காலை 6:25 மணி ரயில், நாளை 30 நமிடங்கள் தாமதமாக செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
03-Jan-2025