உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாடற்ற சித்த மருத்துவமனை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

பயன்பாடற்ற சித்த மருத்துவமனை கட்டடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

திருவாலங்காடுதிருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், அரிசந்திராபுரம் சாலையில், 40 ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவமனை கட்டடம் அமைக்கப்பட்டு மருத்துவமனை செயல்பட்டு வந்தது.இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கும் முன், கட்டடம் மிகவும் சேதமடைந்தது. பின் மருத்துவமனை மூடப்பட்டது. தற்போது சித்த மருத்துவமனை திருவாலங்காடில் இயங்கி வருகிறது.இந்நிலையில் 15 ஆண்டுகளாக கட்டடம் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள நிலையில், அதை இடித்து அகற்றாமல் விடப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனை கட்டடம் பாம்பு தேள் பூச்சிகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி உள்ளது.இதனால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும். குழந்தைகள் வெளியில் விளையாட முடியாத நிலை உள்ளதாகவும் புலம்புகின்றனர்.எனவே, பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !