உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை வளைவுகளில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

சாலை வளைவுகளில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே, சித்தராஜகண்டிகை கிராமத்திற்கு செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. இச்சாலையில், ஆபத்தான நிலையில், மூன்று இடங்களில் வளைவுகள் உள்ளன.வாகன ஓட்டிகள் சற்று அசந்தாலும், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலையில் அந்த வளைவுகள் உள்ளன.இச்சாலையில் வளைவுகள் இருப்பதற்கான அறிவிப்பு பலகை இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, வளைவுகள் உள்ள இடத்தில் சாலையோர தடுப்பு அமைக்க வேண்டும். வளைவுகள் இருப்பதற்கான, ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி